னகரம் வரை
புள்ளிபெறாமலேயே
புதைந்த எழுத்து -அப்பா
மனதுக்கு வைத்தவிருந்து
மரண பயம்
வாழ்கின்ற நாள்
நரகமானது
சாகின்றநாள்
தெரிந்ததால்
வெளிக்காட்ட முடியாத
பாசப் புதையல்
கடைசிவரை
வெடிக்காமலே
கருகிப்போன
அன்பு வெடி
ஆன்மீகத்து
சாதகப் பறவை
ஆரம்பத்திலேயே -அஸ்தமனம்
ஆனது உன் வாழ்வில்
தூங்கிப் போனது - நம்
சாமி
எங்களை கைவிட்ட
தெய்வத்தின் தொழில்
காத்தல்
மரணம் பயத்தின்
கொடிய
நிமிடங்களில்
நிழலாடிய
பூலோக நரகம்
உனக்கு மட்டும்- வாழ்க்கை
64 வது நாள் 30-10-2011
நரகம் வாழும்போது
உனக்கு - உன்
வாழ்க்கைக்கும் பின்
எனக்கு
இன்னொரு முறையா
நீ
வரப்போகிறாய்
அப்பாவாக
எனக்கு
உனக்காக நான் எழுதும்
வார்த்தைகள்
முழுமை அடையாமலேயே
முடிந்து போகிறது
உன்னைப் போலவே!
ஊமைத் தருமரே
இருட்டில் மூழ்கிய
நெருப்பே
பராசக்தி!
கண்ணைக்
கொடுத்தபின்-எனக்கு
காட்சி கொடுத்தாலும்
என்ன பயன்?
நம்பவில்லை
பிழைக்க மாட்டாய் என்றபோது
மருத்துவனை
இல்லாத காலத்தில்
நீ இல்லை என்பதை
ரணங்களில் கழிந்த
கடைசி கணங்கள்
தர்மத்தின் மீதிருந்த
நம்பிக்கையையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக