கைவிடும் போதெல்லாம்
"புத்தகங்களை வாசித்துக் கொள்ளுங்கள் ..."
வாசித்தல் என்பது
ஒரு கலை
ஒரு மன நிறைவு
ஒரு தனிமை விரட்டி...
வாசிக்கும் போது எதுவும்
மனதில் பதியாதது போல்
ஒரு குழப்பமான
மன நிலையைத்தான் கொடுக்கும்...
ஒவ்வொரு சிறந்த புத்தகங்களும்
ஒவ்வொரு "வைட்டமின்"
மாத்திரைகள் மாதிரி
மூளையால் உறிஞ்ச பட்டு
மனதில் பதி(விதை)க்க படுகிறது...
அது நமக்கே தெரியாமல்
நம்மை பலப்படுத்துகிறது
உடனே தெரிவதில்லை எந்த
மாற்றமும்.....
ஒரு சிறந்த புத்தகம் என்பது
ஆயிரம் அனுபவங்களை
சுமந்திருக்கிறது...
வாசித்தலை நேசித்தாலே
இங்கே பல வலிகளுக்கு
வழி தானாக பிறக்கும்....!!!
காற்றின் மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக