சனி, 22 பிப்ரவரி, 2025

இந்த தனிமையின்

உன் கரம் விடுபட்ட நாளிலிருந்து
தொடங்கியது நெருப்பின் மேல்
நின்றுழலும் இந்த 
நரகமொத்த வாழ்க்கை.. !! 

இந்த தனிமையின் 
சுதந்திரமென்பது 
ஒரு எரிமலையின் 
உச்சி மேல்
நின்று கொண்டு ... 
அலை கடலின் ஓசையையும்
நிலவின் அழகையும்
தென்றலின் குளிர்ச்சியையும்
ரசிப்பதை போல.... 

என் வாழ்வில் நீயற்ற 
இந்த வெறுமை 
என் இதயத்தில் 
எரிமலை போல் 
கனன்று கொண்டே இருக்கிறது... 

தனிமை என்பது வரமும் அல்ல 
இந்த சுதந்திரம் என்பது 
விடுதலையுமல்ல.... 

சாப மொத்த இந்த வாழ்கையை 
எனக்கு நீ 
பரிசளித்திருக்க வேண்டாம்...!! 

காற்றின் மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக