ஞாயிறு, 20 ஜூலை, 2025

மகிழ்ச்சியாக இரு

#மகிழ்ச்சியாக_இரு ! ! !_*

தகப்பனே கொலை செய்ய 
முயற்சித்த போதும்
#பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
#அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
#கைகேயி 
மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
#விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
#பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இளம் விதவையான சமயத்திலும்
#குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .  

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
#குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . 
இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ? 

அதுதான் #பிரம்மரகசியம் என்பது.....!

தன்னோடு #இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!! 

இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர என்ன வழி?

#தன்னைஅறிந்தால்
தன் தலைவனை அறியலாம் . . .

தன்னை அறிய
தன்னை உணர்ந்த
உண்மை #குருவை
நாடுவதே சிறந்த வழி...  

அதனால் இனி வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக 
#கலங்காதே!

*எது எப்படி இருந்தாலும்,*
*எது எப்படி நடந்தாலும்,*
*யார் எப்படி* *நடத்தினாலும்,*
*யார் எப்படி* *மாறினாலும்,*
*எதை இழந்தாலும்,*
*யாரை இழந்தாலும்,*
*உன் இறைவன்* *உன்னுடன்*
*எப்போதும்* *இருக்கின்றான்*
*என்பதை முழுமையாக* 
*நம்பு....*

#நீயும்மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
#பிறரையும்மகிழ்ச்சியாக #இருக்கவிடு.

உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்.....!

#மீள்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக