புதன், 16 ஜூலை, 2025

தீத்தின்னும்

தீத்தின்னும் பொழுதுகளில்
மழையையும்
மழை கொல்லும் காலங்களில்
வெய்யிலையும் 
எவரும் பேசும் பேசாத சொற்கள்
பதங்கமாக்கிக்கொள்வதையும்
காலம் படியளந்திருக்கிறது

நிறைநாழி அதன் 
தலைமாட்டில் அமர்த்தும்
கடைசி தானியம் ஒன்று 
கீழே சிதறாது இருக்கச்சொல்லும்
இந்த கவனத்தை உற்றுநோக்க
எது இங்கே மையப்யுள்ளி

கிளறிவிடும் காலங்களில்
பிரத்யேக நதியொன்றில்
மெல்ல பயணிக்கும் 
என் படகை சாய்த்து விடாது
மண்டியிடத்தான் பிரார்த்தனை 

ஒரேயொரு வாக்குதத்தம்
நிறைவேறாத நீர்த்துப்போகாது
உள்ளே கொதிக்கும் உலைநீர்போல
சுட்டுக்கொண்டேயிருக்கையில்
சிலபோது அச்சம் கூடுகிறது

ஆனாலும் ஒளியின் வழி
என் சாளரம் நுழைவதன்
ஆசி உணர்கையில்
மனம் மலரத் தோன்றுகிறது 

வாழ்வின் மீது
எனக்கொன்றும் எந்நாளும் 
தீராதப் பகையில்லை.....

உமா மஹேஸ்வரி பால்ராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக