வியாழன், 14 ஆகஸ்ட், 2025

எங்கோ என் கவனத்தை

எங்கோ என் கவனத்தை
சிதற விட்டது போல்
வாழ்ந்து இருக்கிறேன்

இன்னும் உன்னை
மிகச்சரியாகக்
கொண்டாடியிருக்க 
வேண்டும்

எத்துனை ஆதுரம்
உன் சொல்
எத்துனை மதுரம்
உன் பிரியம்

உன் மொழிகளால்
இந்தப்பிரபஞ்சம் அறிய
உன் அன்பை உத்தேசிக்கும்
பொருட்டு 
என் வாழ்வு துலங்குகிறது

உயிர்க்கும் இன்றைய
பூக்களின் ஒவ்வொரு 
இதழ்களிலும் உன்முகம்
காண்கிறேன்

வாழ்வின் பூரணத்துவம்
அல்லது துலங்குதல்
எளிய அன்பின் கைம்மாற்றல்

உயிர் இருக்கும் வரை
மறக்கக்கூடாத பிரியம் உனது..

உமா மஹேஸ்வரி பால்ராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக