திங்கள், 13 ஜனவரி, 2025

முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு"!

எல்லாக் கடனையும் அடைத்துவிட்டேன்
நண்பன் ஒருவன் எனக்காகச் சிந்திய 
சில சொட்டுக்
கண்ணீருக்கு மட்டும்
வட்டி ஏறிக்கொண்டே போகிறது

-----

ஒவ்வொரு முறை
வீட்டு முகவரியை
சொல்லும்போதும்
நினைவில் வந்து 
போகிறார் அம்மா

-----

ஒற்றைத் துளி
காதலில் தான்
எத்தனை எத்தனை
சமுத்திரம்

-----

மயானத் தொழிலாளனின்
பார்வையில்
நாம் எல்லாரும்
நடை பிணங்களே

--
முகப்பு உரையில் 
"உள்ளே
உங்களையோ என்னையோ
காண நேரலாம்
ஏனெனில் 
இங்கே நம்மைத் தவிர
வேறு யாரும் இல்லை" 
- நந்தன் சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக