திங்கள், 13 ஜனவரி, 2025

இறப்பதற்கு முன் இறக்காதீர்கள்

என்ன நடந்தாலும் உயிரோடு இருங்கள்
நீங்களாக இறப்பதற்கு முன் இறக்காதீர்கள். உங்களை இழக்காதீர்கள், 
நம்பிக்கையை இழக்காதீர்கள், 
திசையை இழக்காதீர்கள்.

உயிர்ப்புடன் இருங்கள்,
கற்றுக் கொள்ளுங்கள்,
நிறைய படியுங்கள்,
அறிவாய் சிந்தியுங்கள், 
ஏதையும் உருவாக்குங்கள், 
புதிதாய் கண்டுபிடியுங்கள்,
மௌனமாய் பேசுங்கள், 
மெல்ல எழுதுங்கள் ,
கனவு காணுங்கள் .

உயிருடன் இருங்கள், 
உங்களுக்குள் உயிருடன் இருங்கள், வெளியேயும் உயிருடன் இருங்கள், 
உலகின் வண்ணங்களால் 
உங்களை நிரப்புங்கள்,
உங்களை அமைதியால் நிரப்புங்கள், நம்பிக்கையால் உங்களை நிரப்புங்கள்.

மகிழ்ச்சியுடன் வாழுங்கள். 

"வாழ்க்கையில் வீணாக்கக் கூடாதது ஒன்றே ஒன்றுதான், அதுவே வாழ்க்கை."

#ப்ரியா_காசிநாதன் 
#ப்ரியாவின்_கவிதைகள்

முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு"!

எல்லாக் கடனையும் அடைத்துவிட்டேன்
நண்பன் ஒருவன் எனக்காகச் சிந்திய 
சில சொட்டுக்
கண்ணீருக்கு மட்டும்
வட்டி ஏறிக்கொண்டே போகிறது

-----

ஒவ்வொரு முறை
வீட்டு முகவரியை
சொல்லும்போதும்
நினைவில் வந்து 
போகிறார் அம்மா

-----

ஒற்றைத் துளி
காதலில் தான்
எத்தனை எத்தனை
சமுத்திரம்

-----

மயானத் தொழிலாளனின்
பார்வையில்
நாம் எல்லாரும்
நடை பிணங்களே

--
முகப்பு உரையில் 
"உள்ளே
உங்களையோ என்னையோ
காண நேரலாம்
ஏனெனில் 
இங்கே நம்மைத் தவிர
வேறு யாரும் இல்லை" 
- நந்தன் சூரியா

அவமானம்

ஓரிடத்தில் நீ அவமானப்படுத்தபட்டால் அவ்விடத்திலிருந்து நிறந்தரமாகவே விலகிவிடு... அன்பு, பாசம், என மீண்டும் சேர்ந்து நின்றால் அவமானங்கள் நிறந்தரமாகிவிடும்...

ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி
விளக்கம் கூறாதீர்.ஏனெனில்,
உங்களை நேசிக்கும் ஒருவருக்கு
அது தேவைப்படுவதில்லை
உங்களை வெறுக்கும் ஒருவர்
அதை நம்பப்போவதில்லை.

யாரும் உங்கள்
கண்ணீரை பார்ப்பதில்லை..
யாரும் உங்கள்
கவலைகளை பார்ப்பதில்லை..
யாரும் உங்கள்
வலிகளை பார்ப்பதில்லை..
ஆனால் எல்லோரும் உங்கள்
தவறை மட்டும் பார்ப்பார்கள்.

விலகி இருங்கள் உங்களை ஏமாற்றுபவர்களிடத்திலிருந்து மதிக்காதவர்களிடத்திலிருந்து உபயோகிப்பவர்களிடத்திலிருந்து விமர்சிப்பவர்களிடத்திலிருந்து தாழ்த்தி பேசுபவர்களிடத்திலிருந்து...

உறவுகள் நீர் போன்றது மனதில் ஈரம் உள்ளவரையில்...உறவாடும்
மனம் குளிர்ச்சியானால்...
உறையும் மனம் கொதித்தால்...
நீராவியாகிவிடும்.

சில நேரங்களில் சில மனிதர்களின் செயல்களை கண்டு ஆத்திரப்படுவதை விட! அமைதியாக சென்று விடுவது நல்லது!

உண்மையான உறவு என்பது, நமக்காக விட்டுக்கொடுக்கும்....
ஆனால், நம்மை அடுத்தவரிடம் எதற்க்காகவும் விட்டுக்கொடுக்காது..

புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!

மனைவியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் மனைவி கண் கலங்குவதை விரும்புவதில்லை!

இந்த உலகில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதைவிட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்...