கடைவீதிக்குச் சென்று வந்தேன்
ஓடக்கர பள்ளத்துல
ஊண்டி நடக்குனும்னு
ஒரு சாச்சு விழுந்ததுல
உடம்பு காயம் பட
மகன் கேட்டான்
வயசான காலத்தில
ஓரிடத்தில உக்கார வேண்டியது தான
இனி
உனக்கு ஒரு வைத்தியம் பாக்கனுமா?
மருமக கேட்டா பாத்து நடக்கனும்னு
என் பேத்தி மட்டுமே கேட்டா
அப்பத்தா வலிக்குதான்னு..